சிக்கிய ஆவணங்கள்., அதிகாலை முதல் ரெய்டு.! கே சி வீரமணி மீது வழக்கு பதிவு.!
IT RAIN IN EX MINISTER KC VEERAMANI
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வேலூரில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை வணிகவரி பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தபோது கே சி வீரமணி தனது பெயரிலும் அவருடைய தாயாரின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
வருமானத்தைவிட 654 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக அறப்போர் இயக்கம் இவர் மீது புகார் கொடுத்து இருந்தது. மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஒருவரும் இவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை முதல் கே சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் சொத்துகளை வாங்கியதாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது குற்றச்சாட்டு எழுந்தத நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கே சி வீரமணி மீது 28.78 கோடி ருபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வேல்;இயக்கியுள்ளது. இந்த ஆவணங்களை சரிபார்த்தபின் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
IT RAIN IN EX MINISTER KC VEERAMANI