திருமாவளவன் கேட்டுச்சா., இஸ்லாமிய பெண்கள் இயக்கமே சொல்லிட்டாங்க., நாடக காதலுக்கு துணை போகமா திருந்துங்க.! - Seithipunal
Seithipunal


பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவால், பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த மசோதா குறித்து தெரிவிக்கையில், "அப்படி 21 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் நிலை உருவாகும். பெரும்பாலும் சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் நடக்கின்ற போது, இந்த வயது வரம்பை ஒரு காரணமாக காட்டி, அவர்கள் மீதுதான் போக்சோ சட்டம் அதிகமாக ஏவப்படுகிறது.

எனவே, சாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களை எதிர்க்கக் கூடியவர்கள் இதனை வரவேற்கிறார்கள். இந்த சட்டம் அந்த அடிப்படையில்தான் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது" என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

அதாவது பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால், சாதி மறுப்பு திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது சிக்கலாகிவிடும்., அப்படி செய்தால் போக்ஸோ சட்டம் பாயும்., என்று திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் சொன்ன மத மறுப்பு திருமணத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் 'குழந்தை திருமண சட்ட திருத்தம்' மசோதாவுக்கு, பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்த கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை வரவேற்கிறோம். இந்தச் சட்டம் நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. அப்படி வழிவகை செய்யவில்லை என்றால் இந்தச் சட்டத்தினால் இஸ்லாமிய பெண்கள் பயனடைய முடியாமல் போய்விடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலவரம் என்ன என்று இப்போதாவது தெரிந்துகொண்டு, நடக்க காதலுக்கு துணை போகாமல் பெண் பிள்ளைகளை படிக்கும் வயதில் படிக்க விட வேண்டும் என்று பல தரப்பினரும் திருமாவளவனுக்கு சமூக வலைத்தளம் மூலமாக அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகம் பகிரப்படும் சமூக வலைத்தள பதிவுகளில் இருந்து கீழ் வரும் செய்தி தொகுத்து வழங்கப்படுகிறது. ஒரு பெண் பள்ளி படிப்பை முடிக்கும் போது 17 வயதை பூர்த்தி செய்கிறார். அதன் பின்னர், உயர்க் கல்வியாக ஒரு 3 வருட கல்லூரி படிப்பை முடித்தால் அந்த பெண்ணுக்கு 20 வயது பூர்த்தியாகி, 21 ஆரம்பிக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்து, அடுத்து ஒரு பணிக்கு சென்று, தன் காலில் நின்று, சுயமாக சிந்திக்க கூடிய ஒரு நிலையை முழுமையாக அடைகிறாள். மேலும் பெண்ணின் உடல் நலமும் சீரானதாக இருக்கும். 

ஆனால், தற்போது 21 வயதுக்கு முன்பாகவே அப்பாவி பள்ளி, கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, கல்லூரி படிப்பை படிக்க விடாமல் அப்படி என்ன சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம்? என்று பல தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தாலியுடன் அவள் திருமண வாழ்க்கையை தொடர்வாளா? கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்துவாளா? 

21 வயது திருமண வயது உயர்வு என்பது பெண்களின் பெண்ணுரிமைக்கு ஒரு உதாரணமாக தான் இருக்குமே தவிர., திருமாவளவன் சொல்வது போல பெண்ணுக்கு அது ஒருபோதும் தடையாக இருக்காது. வேண்டுமென்றால் நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளிடம் கருத்து கேட்டு பாருங்களேன்...

சாதியை ஒழிக்கவும், மதத்தை ஒழிக்கவும் சட்டம் இயற்ற வேண்டுமே தவிர., நாடக காதலை வளர்த்து, படிக்கும் பெண்களின் எதிர்காலத்தை சீரழிக்க திருமாவளவன் துணை போக கூடாது. சாதி, மதத்தை ஒழிக்க பெண்ணை ஒரு கருவியாக பயன்படுத்துவது மிக கேவலம், அசிங்கம், அவமானம் என்று, பல தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

islam woman iyakkam welcome for marriage age


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->