எச்.ராஜா என்ன சூத்திரரா? - திருமாவளவன் கேள்வி - Seithipunal
Seithipunal


திமுக எம்பி ஆ.ராசா இந்துக்களை பற்றி கூறிய கருத்திற்கு சூத்திரன் அல்லாத எச். ராஜாவிற்கு ஏன் கோபம் வருகிறது!

திமுகவின் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்கள் பற்றி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக எம்பி ஆ.ராசாவை பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் "சூத்திரர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்திக் கொண்டு வருகிறது. சூத்திரர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேள்வி எழுப்ப வேண்டும் எச். ராஜா சூத்திரரா என்ற கேள்வி எழுப்ப கடமைப்பட்டுள்ளோம்.

 உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரமத்தின் படி எச் ராஜா சூத்திரரா? சூத்திரன் அல்லாத எச்.ராஜாவிற்கு ஏன் ஆத்திரம் வருகிறது. ஆ.ராஜாவின் விளக்கமானது சூத்திரர்களை பார்த்து சொல்லும் கருத்து. நான்கு வர்ணங்களில் நான்காவது வர்ணமான சூத்திரன் கீழ் சாதி என்று சொல்லக்கூடிய தலித் அல்லாத பழங்குடி அல்லாத பிராமணர் அல்லாத சத்திரியர் இல்லாத வைஷ்ணவர் அல்லாத பிற பிரிவினரை உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது ஏற்றுக் கொள்கிறாயா என கேள்வி எழுப்புகிறார்.

 ஆனால் இவர்கள் ஒட்டுமொத்த இந்துக்கள் பாதுகாவலர்கள் என்பது போல ஒரு தோற்றத்தை மாயையை உருவாக்க முயல்கிறார்கள். வட இந்தியர்கள் வேண்டுமானால் நம்பலாம் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் இந்த கும்பலின் சதியை, சித்து விளையாட்டை, சூழ்ச்சியை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்" என பேசியுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is H Raja a Shudra asked by Thirumavalavan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->