மோடியே வராத சூழ்நிலையில், தமிழகம் வருகிறார் ராகுல்! அதிர்ச்சியில் பாஜக !!
மோடியே வராத சூழ்நிலையில், தமிழகம் வருகிறார் ராகுல்! அதிர்ச்சியில் பாஜக !!
கடந்த 10 நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்த கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான உதவி செய்தபோதும், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், ஒரு சில சமுக நல அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிவாரண பொருட்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆவர் கூறுகையில், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருகிறார் என்றார்.
நாட்டின் பிரதமர் மோடி, இன்னும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்வையிடாத நிலையில், ராகுல் வருவது, மற்ற அரசியல் கட்சி இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
INDIAN Congress Leader Come Tamilnadu