விழுப்புரம்: முக்கிய புள்ளியின் வீடு மற்றும் அலுவகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.!  - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசு ஒப்பந்ததாரரான குமார் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் திண்டிவனத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.

 

குறிப்பாக இவர் விழுப்புரம் மாவட்டத்தின் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மூலமாக பல்வேறு சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் பெரும் தொகையான ஒப்பந்தங்கள் இவருக்குதான் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் திண்டிவனம் அருகே எம் சாண்ட் மணல் குவாரி பெரிய அளவில் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், இன்று காலை வருமான வரித்துறையின் 5 பேர் கொண்ட குழு திண்டிவனத்தில் உள்ள டி கே குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax Raid in Vilupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->