தொகுதி பங்கீட்டில் இழுபறி.! டெல்லியில் இருந்து கதறவிடும் அமித்ஷா.!!
in mumbai mla election bjp and shiv cena not confirmed
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் மாதம் 21 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ள நிலையில்., பிற கட்சிகள் தங்களின் முதல் சுற்றுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்த தருணத்தில்., தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சிகளுக்கான தொகுதி பங்கீடானது இருவரும் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும்., நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி மற்றும் காஷ்மீர் பிரச்சனையை கையாண்ட விதம் குறித்த முடிவுகளால்., தங்களின் கட்சிக்கு பலம் அதிகரித்துள்ளதாக பாஜக நினைத்து வருவதால்., இருவருக்கும் இடையே கூட்டணி பங்கீடு குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்., முதலிலேயே பேசிய ஒப்பந்தங்களின் படி சிவசேனா மற்றும் பாஜக தொகுதி பங்கீடு., முதலமைச்சர் பதவி ஒப்பந்தத்தின் படி பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த தருணத்தில்., கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரண்டு கட்சி தலைவர்களும் கூட்டணி தொகுதிகள் குறித்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்., முடிவு தற்போது வரை எட்டப்படவில்லை என்பதால்., பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாது என்று கூறப்பட்டது.
இந்த விசயத்திற்கு அடுத்தபடியாக., நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல்., முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தொகுதி பங்கீடு குறித்து., பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய மந்திரி அமித்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த சமயத்தில்., அமித்ஷா மும்பைக்கு வர இருப்பதாக தகவல் வெளியான நிலையில்., அமித்ஷாவின் வருகைக்கு பின்னர் தொகுதி பங்கீடு குறித்து உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில்., அமித்ஷா வருகை இரத்தானதை அடுத்து., தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தடையாகியுள்ளது. இது இரு கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai mla election bjp and shiv cena not confirmed