குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி?.! ராகுல் காந்தியின் பிரச்சாரம் பொய்த்ததால்., சோகத்தில் உடன்பிறப்புகள்.!!
in Gujarat state bjp candidate wait to won 26 mp selections
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் முடிவுகளை அறிவிக்கும் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை சுமார் 8 மணிக்கு துவங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு துவங்கப்பட நிலையில்., பின்னர் சரியாக 08.30 மணிக்கு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்கு துவங்கப்பட்டது. இந்த தேர்தல் பணியில் தமிழகத்தில் சுமார் 45 மையங்கள் அமைக்கப்பட்டு., 17 ஆயிரம் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்., சுமார் 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 36 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லலும் நபர்களுக்கு அதிரடி கட்டுப்பாடானது தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., இந்தியளவில் பாரதிய ஜனதா கட்சி 341 இடங்களில் முன்னிலையிலும்., காங்கிரஸ் கட்சி 95 இடங்களிலும்., பிற கட்சிகள் 106 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 38 இடங்களிலும்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 2 இடங்களிலும்., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 0 இடங்களிலும்., நாம் தமிழர் கட்சி 0 இடங்களிலும்., மக்கள் நீதி மையம் கட்சி 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் திமுக 13 இடங்களிலும்., அதிமுக 089 இடங்களிலும்., அமமுக 0 இடத்தில் முன்னணியில் உள்ளது. புதுச்சேரியை பொறுத்த வரையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் உள்ளார்.
இந்நிலையில்., இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும்., பாரதிய ஜனதா கட்சியானது தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியானது பின் தங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி சொந்த மண்ணில் நரேந்திர மோடியை தோற்கடிப்பேன் என்று கூறிய நிலையில்., ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் முன்னிலை பெறாததால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
English Summary
in Gujarat state bjp candidate wait to won 26 mp selections