கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
ias vijiyalakshimi approve to visit kodaikanal
நாளை முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை (09/09/2020) முதல் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனால் திண்டுக்கல் மாவட்ட அல்லாமல் வெளி மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளார். மேலும், உள் மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை அவசியம். முதற்கட்டமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் பூங்கா திறக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ias vijiyalakshimi approve to visit kodaikanal