ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
ias officer change
மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு பயிற்சி மைய இயக்குநராக எஸ். நாகராஜன் இன்று முதல் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த எம். பாலாஜி, இன்று முதல் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றுவார் என்றும் இதேபோல, கூடுதல் தலைமை தேர்தர் அதிகாரி வி.ராஜாராமன், இனிமேல் நகரம் மற்றும் கிராம திட்ட இயக்குநராக நியமிக்கபட்டுள்ளார்.
மதுரை மாவட்ட வருவாய் அலுவலராகு பணியாற்றி வரும் சாந்தகுமார் , மாவட்ட ஆட்சியர் பொறுப்பை மறு உத்தரவு வரும் வரை கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.