டவுசர் மாட்டிக்கொண்டு ஓடும் திமுக அமைச்சர்! இலாக்காவை மாற்றி கொள்ள அறிவுறுத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


செய்த தவறுகளை சுட்டிக் காட்டினால் அடிப்பது உதைப்பது கொலை செய்வது திமுகவினரின் கைவந்த கலை!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திமுகவையும் அதன் அமைச்சர்களையும் கடுமையாக தாக்கி பேசினார்.

அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் "திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டினால் அடிப்பது உதைப்பது கொலை செய்வது அவர்களுக்கு கைவந்த கலை என கூறினார். 

அதிமுக ஆட்சியில் இருந்த கொரோனா காலத்தை சுகாதார துறை சார்பாக செயல்பட்டது. ஆனால் தற்போது இருக்கும் திமுக ஆட்சியில் தமிழக முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அரசு மருத்துவமனை, வானூர் அரசு மருத்துவமனை மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனைகளில் கூட மருந்து தட்டுப்பாடு உள்ளது. 

உயிர் காக்கும் மருந்து முதல் சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்து வரை அனைத்து மருந்துகளும் தட்டுப்பாட்டில் உள்ளது. சுகாதாரத் துறைக்கு தேவையான மருந்துகளை கேட்டுப் பெறாமல் சுகாதாரத்துறை அமைச்சர் டவுசரை மாட்டிக்கொண்டு ரோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறார். அதற்கு திமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளையாட்டு துறையை கேட்டு பெற்றிருக்கலாம்.

மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை கூட கேட்டுப் பெற முடியாத துப்பு கெட்ட சுகாதாரதுறை அமைச்சர் என கடுமையான  சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hitting kicking and killing if you point out the wrongs done is DMK art


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->