தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!!
high court says corona virus
சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கின்றனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் இந்திய, அமெரிக்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி இருக்கின்றது.
சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் 20,000 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போலவே வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும் பல நாடுகள் மிகவும் தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவாமல் சமாளிக்க எடுத்த நடவடிக்கை என்ன? விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் பரவாமல் சமாளிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க கோரிக்கை. மேலும், வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
English Summary
high court says corona virus