காங்கிரஸ் முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.! உற்சாகத்தில் தொண்டர்கள்.!
high court bail for sivakumar
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தற்போது முன்னாள் அமைச்சர் சிவக்குமார் உள்ளார். சமீபத்தில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் சிவக்குமாரை கடந்த மாதம் கைது செய்தனர்.
பணப்பரிமாற்றத்தில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஒரு மாத காலமாக டெல்லி திகார் சிறையில் இருந்துவந்தார்.
இந்தநிலையில், டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு செல்ல கூடாது போன்ற நிபந்தனைகளுடன் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
மேலும், 25 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திகார் சிறையில் இருந்த டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை தான் நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. டி.கே.சிவகுமார் ஜாமின் கிடைத்தால் காங்கிரஸ் மாநில தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
high court bail for sivakumar