சட்டமன்றத் தேர்தலுக்கு, சைக்கிளில் வந்து வாக்களித்த முதலமைச்சர்.!
haryana cm came on bicycle in voted
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிக்கும், அரியானாவில் உள்ள 90 தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. அதேபோல காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது. அரியானாவில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது.
இந்நிலையில், அரியானா சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் லால் கட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தார். கர்னால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.
English Summary
haryana cm came on bicycle in voted