சிவகங்கையில் தொழிற்சாலைகள்., இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்று பல்வேறு நலத்திட்டங்கள்.!! எச்.ராஜா அதிரடி.!!
h raja speech about after getting win parliament election youngster job
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் 97 மக்களவைத் தொகுதிகளுக்கு உண்டான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இதனையடுத்து இன்று மாலையுடன் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரம் நிறைவு பெறவிருக்கும் நிலையில்., அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் அவர்களின் கொள்கை மற்றும் மக்களின் நலன் குறித்த தகவலுடன் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்., பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் போட்டியிடுகிறார். இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெரும் நிலையில்., புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அந்த சமயத்தில் செய்தியாளர்களிடையே பேசி அவர் தெரிவித்தாவது., நாட்டிற்கும் நாட்டு மக்களின் நலனிற்கும்., தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும்., சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
English Summary
h raja speech about after getting win parliament election youngster job