சிக்கலில் சிக்கிய சீமான்.. எதிராக திரும்பிய அரசியல் தலைவர்கள்!
h raja says about seeman speech
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கஞ்சனூரில் பிரச்சாரத்தில் பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என பேசினார்.
சீமானின் இந்த பேசு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீமானுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் சீமானின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீமானின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என்று கூறினார்.
சீமான் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
English Summary
h raja says about seeman speech