ரஜினிக்கு ஆலோசனை சொல்ல தகுதி இருக்கா.? ரஜினியை புகழ்ந்து தள்ளிய அரசியல் பிரபலம்.!
h raja says about rajini and congress
இன்று பழனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, "ஊழல் குற்றம் சாட்டப்பட்டிற்கும், ராகுல் காந்தியும், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தலைமையில் இயங்குபவர் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இவர் இன்னமும் அரசியலில் இருக்க வேண்டுமா என்பதை முதலில் யோசிக்க வேண்டும். இவரெல்லாம் ரஜினிக்கு ஆலோசனை வழங்க முதலில் தகுதி இருக்கிறதா?
தமிழகத்தில் "அன்சருல்லா" என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் தமிழகத்தில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வரவில்லை. இது தான் பயங்கரவாதத்தை வளர்த்து விடுகிறது.
சென்னை மண்ணடி இந்த பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும். வெளிநாட்டிலிருந்து சிலைகளை கொண்டு வர முயற்சிக்கும் பொன்மணிக்கவேலுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். மாபா.பாண்டியராஜன் வெளி நாட்டிலுள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என தெரியவில்லை என்று கூறியிருப்பது, இந்து அறநிலையத்துறை சட்டம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதை காட்டுகிறது.
கட்சித் தாவல் தடைச்சட்டம் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றுக்கட்சிக்கு போனால் செல்லாது என்பது கூட தெரியாத சட்டம் படித்த ப.சிதம்பரததிற்கு தெரியவில்லை. இவருக்கெல்லாம் பாஜக குறித்து பேச தகுதி இருக்கிறதா.? படித்தாலும், வழக்கறிஞராக இருந்தாலும் பணம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால் அவருக்கு சட்டமெல்லாம் மறந்து பொய் விட்டது. சொந்த கட்சி உறுப்பினரை பாதுகாக்க முடியாதவர்கள் எல்லாம் பாஜகவை குற்றம் சாட்டுவது முறையற்றது." என கூறியுள்ளார்.
English Summary
h raja says about rajini and congress