டிவிட்டரில் ஹெச் ராஜாவை சீண்டிய நெட்டிசன்., உடனடியாக பதிலடி கொடுத்த ஹெச் ராஜா.!  - Seithipunal
Seithipunal


பாஜக பிரமுகர் ஹெச் ராஜா தனது றிவிட்டர் பக்கத்தில், "கிறித்தவ மதவெறி சக்திகளால் கொடுமை படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் தந்தை க. முருகானந்தம் நீண்ட நாட்களாக திமுக உறுப்பினர். 

ஆனால், முதல்வர் ஸ்டாலின் லாவண்யாவின் மரணத்திற்கு அனுதாபமாவது தெரிவித்தாரா? திமுகவில் இந்துக்களுக்கு இவ்வளவுதான் மரியாதை என்று உணரவும்" என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், "அய்யா உங்களுக்கு யாரையுமே மனிதனாக அடையாளம் காணமுடியாதா?   எல்லாரையும் மத அடிப்படையில் தான் பார்ப்பீர்களா.?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள ஹெச் ராஜா, "எல்லோரும் மனிதர்கள் என்றால் அந்நிய மதவெறி சக்திகள் ஏன் மதமாற்றம் செய்ய வேண்டும். முஸ்லீம் மற்றும் கிறித்தவர்கள் இனி மதமாற்றம் எனும் மனித விரோத செயலில் ஈடுபட மாட்டோம் என்று அறிவிக்கச் சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா?" இன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், "மதமாற மறுத்ததால் கழிவறை கழுவ கடுமையான பணிகள் செய்ய உததரவிடப்பட்டு துன்புறுத்தலின் காரணமாக தற்கொலைக்கு ஆளான லாவண்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்." என்று ஹெச் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja say JusticeFor TNHinduGirl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->