ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளுக்கு வந்த சோதனை.! வெளியான அறிவிப்பு.!
h raja press meet about stalin school
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலூருக்கு வந்துள்ளார். அப்பொழுது திராவிட கட்சிகள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளது. வேளச்சேரியில் இருக்கும் ஸ்டாலின் குடும்பம் நடத்துகின்ற சான் சைன் மான்ஸ்டர் என்ற பள்ளியின் முன்பு நான் போராட்டம் நடத்துவேன்.
இந்தி திணிப்பு செய்வது ஸ்டாலினின் குடும்பம்தான். திமுகவின் மூத்த தலைவரான அன்பழகனின் பேரன் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் தமிழ் பேசினால், அபராதம் விதிப்பது. இதை எதிர்த்து நான் போராட்டம் நடத்துவேன். இவர்களில் யாரும் தமிழ் உணர்வாளர்கள் இல்லை. தமிழ் விரோதிகள்.
திமுகவின் சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றால், நான் அதற்கு எதிர் போராட்டம் நடத்துவேன். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்களின் சிபிஎஸ்இ பள்ளியின் பட்டியலை சென்ற ஆண்டே வெளியிட்டு இருக்கின்றேன்.
அந்த நாற்பத்தி ஐந்து பள்ளிகளையும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை எடுத்துவிட்டு இவர்கள் கூறும் சமச்சீர் கல்வியை நடத்த வேண்டும். சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுகவினர் தான். சமச்சீர் கல்வியை நடத்த வேண்டும். மேலும், பேனர் பறந்து, விழுந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்." என அவர் அறிவித்துள்ளார். =
English Summary
h raja press meet about stalin school