சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை தான் இவருக்குமா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு மீண்டும் சி.பி.ஐ. காவலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை தான் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு ஏற்படும் என ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, "தமிழகம் எப்பொழுதும் ஆன்மீக பூமி தான் என நிரூபித்து, நாத்திகர்களுக்கு இங்கு இடமில்லை என அத்திவரதர் கூறிவிட்டு சென்றுள்ளார். 

 h.raja seithipunal

மேலும், சேலத்தில் பாஜக அலுவகத்திற்குள் நுழைந்த பியூஷ் மனுஷின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை தான் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு ஏற்படும். குற்றம் புரிந்தவர்கள் யாருமே தப்பிக்க முடியாது." என அவர் கூறியுள்ளார். 

என்ன தான் அரசியலில் மாறி மாறி விமர்சனம் வைப்பது சாதாரண விஷயம் என்றாலும், தற்பொழுது ஸ்டாலின் குறித்து எச்.ராஜா விமர்சிப்பது ஏதோ உள்ளர்த்தத்தின் காரணமாக இருக்குமோ என்று நினைக்க தூண்டுகிறது. 

இதற்கு காரணமாக முன்னதாக சிதம்பரம் குறித்து தேர்தலுக்கு முன்பிருந்தே அவர் சிறைக்கு செல்வார் என எச்.ராஜா குறிப்பிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h. raja press meet about stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->