‌பாஜக ஹெச்.ராஜா வீட்டில் திருடிய மர்மநபர்கள்..2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு சொந்தமான வீடு இருந்தது பழைய வீடு என்பதால் அதை இடித்துவிட்டு அதில் உள்ள இரும்பு பொருட்களை அருகில் உள்ள இடத்தில் வைத்துள்ளனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காலி இடத்தில் கிடந்த இரும்பு கதவுகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜாவின் மருமகன் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் காரைக்குடி கற்பகவிநாயகர் பகுதியை சேர்ந்த வைரம், சோமு ஆகிய இருவரையும் கைது செய்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja house theft


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->