"நான் அப்படி சொல்லவில்லை" அந்தர் பல்டி அடித்த ஆ.ராசாவை பங்கம் செய்யும் எச்.ராஜா.!
H raja about a rasa in twitter
திக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசிய போது, "உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன்.
இந்துவாக இருக்கும் வரை நீ ஒரு பஞ்சவன். தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? தீண்டத்தகாதவர்களாக இருக்க வேண்டும் என்று எத்தனை பேர் ஆசைப்படுகிறீர்கள்? இந்த கேள்வியை நீங்கள் உரக்கச் சொன்னால்தான் சனாதனத்தை முறியடிக்க முடியும்.
சனாதனத்தை முறியடிக்கிற ஆயுதமாக திராவிடர் கழகம் இருக்கும்." என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆ.ராசா, "நான் எதிர்த்தது சனாதனத்தை தான் இந்து மதத்தை இல்லை. சனாதன தர்மத்தின் மனு தர்மம் கூறுவதை தான் அன்று மேடையில் பேசினேன். நான் ஒன்றும் இந்துக்களுக்கு எதிரி இல்லை. இந்து மதம் என்ற பெயரில் கூறப்படும் சனாதன கட்டமைப்புக்கு தான் நாங்கள் எதிரிகள். சனாதனத்தை நிறுத்தாத வரை அரசியல் சட்டம் வாழ முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து சனாதனத்தை ஒழிப்போம்." என்று கூறியுள்ளார்.
அவரது இந்த விளக்கம் அடங்கிய செய்தியை ரீட்விட் செய்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "அடிச்சான் பாரு அந்தர்பல்டி."என்று கூறி பதிவிட்டுள்ளார்.
English Summary
H raja about a rasa in twitter