திடீரென மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்.! ஆடிப்போன உடன்பிறப்புகள்.!!
govt lawyer notice sent to stalin
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்த முடிந்தது. இதற்காக தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில் அதிமுக தென்சென்னை தெற்கு வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திவாகர், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி தேனி பிரச்சார கூட்டத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு குறித்து அவதூறாக பேசியுள்ளார்.அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரியுள்ளார்.
இந்த மனுவை தொடர்ந்து, இது தொடர்பாக ஜூன் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
govt lawyer notice sent to stalin