நாளை நாம் உறுதி ஏற்போம் - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிவிப்பு.!
Governor Tamilisai say about ambeth birth day
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
"அம்பேத்கரின் பிறந்தநாள் நாடு முழுவதும் சமத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைஎளிய மக்கள், தொழிலாளர்கள், பெண்கள் அனைவரது சமூகப் பொருளாதார விடுதலைக்காகவும் பாடுபட்டவர்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் இந்தியாவில் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.
ஜனநாயக நாடாக இந்தியா இன்று அடைந்திருக்கின்ற மிகப்பெரிய வளர்ச்சிக்கு அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டமே அடிப்படையாக அமைந்திருக்கிறது.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கரின் கொள்கைகளையும் புகழையும் பரப்புவதோடு அவர் கனவு கண்ட சமுத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் சபதம் ஏற்போம்"
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
English Summary
Governor Tamilisai say about ambeth birth day