தனுஷ் இந்த முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.. ஜி கே வாசன் இரங்கல்.!!
gk vasna mouring for student dhanush death
‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். தனுஷின் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி திரு . சிவக்குமார் என்பவரது மகன் தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் , தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது .
தனுஷ் அவர்களின் இந்த முடிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தற்கொலை என்பது பிரச்சனைக்கு முடிவு ஆகாது. இதுபோன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபடக் கூடாது. மாணவர்கள் மிகுந்த மன உறுதியோடு இருக்க வேண்டும்.
மாணவர் தனுஷ்சை இழந்து வாடும் அவரது பெற்றோர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரித்துக்கொள்கிறேன்.
English Summary
gk vasna mouring for student dhanush death