ராஜ்யசபா சீட்டை தொடர்ந்து ஜி.கே. வாசனுக்கு கிடைக்போகும் முக்கிய பதவி.. கடுப்பில் ஓபிஎஸ்.!
gk vasan may be central minister post
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதியிலும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அது ஒபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற பிறகு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ரவீந்தரநாத் குமார் இருந்து வந்தார். ஆனால் அதற்கு இடையூறாக வைத்திலிங்கம் எம்பி ஆனால் அது நடக்கவில்லை. தற்போது விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதில் தனக்கு எப்படியும் அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்று ஓபிஎஸ் மகன் நம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் இதற்கும் ஆப்பு வைக்கும் வகையாக அதிமுகவில் சீனியர்கள் இருவருக்கும் ராசப்பா சீட்டுக் கொடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் இம்முறையும் அமைச்சரவையில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முறை தமிழகத்தில் ஒரு அமைச்சர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் தமிழகத்திலிருந்து ஜி.கே. வாசனை தேர்வுசெய்ய ஏற்கனவே மோடியும், அமித் ஷாவும் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜி.கே. வாசனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்க பாஜகதான் காரணம் எனவும் கூறி வருகின்றனர்.
English Summary
gk vasan may be central minister post