சப்-இன்ஸ்., மகளை நாடக காதலில் வீழ்த்திய கயவனுக்கு போலீஸ் வலைவீச்சி.!
girl miss used in selam
ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஒருவரின் 22 வயது மகளை, ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் பசுபதி/ இவனுக்கு வயது 25 ஆகிறது/ இவன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளரின் 22 வயது மகளை, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.
இதனையடுத்து இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலத்தில் இருவரும் சந்தித்தனர். அப்போது பசுபதி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மகளிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் சேலத்தில் இருந்து இருவரும் தாங்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்நிலையில் கயவன் பசுபதியிடம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த இளம்பெண் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அவன் மீது இரண்டு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த கயவன் பசுபதியை வலைவீசி தேடி வருகின்றனர்.