தினகரன் நினைத்தது நடந்தது! மகிழ்ச்சியான செய்தி சொன்ன தேர்தல் ஆணையம்!! உச்சகட்ட மகிழ்ச்சியில் அமமுகவினர்!!
general symbol for ammk
அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து தனியாக கட்சி தொடங்கிய டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியாக இல்லாமல் பொதுவான சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் கட்சியினை பதிவு செய்யும் பணிகள் வேகமாக துரிதப்படுத்தி தினகரன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முறைப்படி தேர்தல் ஒரு கட்சியாக பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து அமமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து பொது சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வருகிற 27ம் மட்டும் 30ஆம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு பொது சின்னம் வழங்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அமமுகவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.