தோல்வி பயத்தில் என்னை கொல்ல முயற்சி.. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு புகார்.!!
firecrackers near minister kadambur raju
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜ் போட்டியிடுகிறார். அதேபோல் அங்கும் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிடுகிறார். இரண்டு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மந்தித்தோப்பு சாலை வழியாக கற் கடந்தபோது, அமமுக தென் மண்டல செயலாளர் மாணிக்கராஜா தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு வந்தார். அவரை அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
அப்போது திடீரென அமைச்சரின் கார் டயரின் அருகே கொளுத்திவிட பட்டாசு சில நிமிடங்கள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட புகையால் காரை முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜு சிக்கிக் கொண்டார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து அமைச்சரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடைபெறுகிறது. நேற்று இரவு என் காரை வழி மறித்து அமமுகவினர் பட்டாசுகளை வீசினர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
English Summary
firecrackers near minister kadambur raju