#BigBreaking || சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் சற்றுமுன் 6 பேர் பலி.!
Fire Crackers Fire Accident
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் ஒரு பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் -போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பட்டாசு மேலும் வெடித்து தீ இன்னும் இருப்பதால் போலீசார் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வருடம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
Fire Crackers Fire Accident