தூத்துக்குடி: பேஸ்புக்கில் மூழ்கிய சகோதரி., சரமாரியாக வெட்டி கொலை செய்த சகோதரன்.!
fb chatting sister murder
ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்பதாக கூறிவிட்டு, முகநூல் மட்டும் வாட்ஸ் அப்பில் மூழ்கிக் கிடந்த சகோதரியை, அவரின் சகோதரரே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த வசவபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. இவரின் மகன் மாலைராஜா, அவரின் சகோதரி கவிதா பன்னிரண்டாம் வகுப்பு ஆன்லைனில் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்தார்.
தற்போது அவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வான நிலையில், அவர் அந்த ஸ்மார்ட் போனில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களில் ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் அவர் ஆன்லைன் விளையாட்டுகளிலும் தீவிரம் காட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை வீட்டில் உள்ளவர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கவிதா தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவதிலும், சாட்டிங் செய்வதிலும் மூழ்கி கிடந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஸ்மார்ட்போனில் விளையாடிக் கொண்டிருந்த கவிதாவை அவரின் சகோதரர் கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய போது, மாலை ராஜா தனது சகோதரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டார்.
10 இடங்களில் வெட்டுக்காயம் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே கவிதா பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மாலை ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
fb chatting sister murder