பெற்ற மகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..!
Father arrested for sexually abusing daughter
பெற்ற மகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், காட்டிள்ளா பகுதியை சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவர் அந்த பகுதியில் தொழிலதிபராக இருக்கிறார். இவர் தனது மகளை போதைக்கு அடிமையாகி கடந்த 4 ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கு கடிதம் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடித்ததை தொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முகமது ஷெரீப் பாலியல் வன்கொடுமை செய்ததை தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தந்தையே மகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father arrested for sexually abusing daughter