பிரதமர் மோடிக்கு பறந்த கடிதம்.. கலங்கி போய் நின்ற மோடி.!!
farmer letter to pm modi
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர பால் சிங். இவர் ஒரு விவசாயி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் இவரது ஊரில் தண்ணீர் அதிகப்படியான உப்புடன் இருக்கிறது. இந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு மோடியை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சந்திர பால் சிங் கூறுகையில், இந்த தண்ணீரை யாருமே குடிக்க முடியவில்லை. அதிகப்படியான உப்பு இருப்பதால் விவசாய பயிர்களுக்கும் கருகிவிடுகிறது. இதனால் என்னுடைய குடும்பத்திற்கு என்னால் பாட்டில் தண்ணீர் கூட வாங்கி கொடுக்கவில்லை.
பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. எங்களுடைய வாழ்வை முடித்துக்கொள்ள முடிவுக்கு வந்தோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் மோடி அனுமதி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.