#BREAKING: புயல் வருவதற்கு முன்பே தமிழகத்துக்கு பணம் வந்தது தானே.. மத்திய அரசு அதிரடி.!
fani cyclone fund in central govt
தென் மேற்கு வங்க கடலில் உருவான ஃபானி புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், தற்போது திசை மாறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று தீவிர புயலாக வலுப்பெற்ற ஃபானி புயல் இன்று அதி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. ஃபானி புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் ஃபானி புயல் மிகவும் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் ஒடிசா கடல் கரையை நெருங்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக, ஒடிசா பகுதியில் கடற்கரை பகுதியில் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அரசு ஃபானி புயலை எப்படி எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்துக்கு ரூ.309.375 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
மேலும், ஆந்திரா (200.25 கோடி), ஒடிசா (340.875 கோடி), மேற்கு வங்கம் (235.50 கோடி) ஆகிய மாநிலங்களுக்கும் புயல் முன்னெச்சரிக்கை நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
English Summary
fani cyclone fund in central govt