குடிமகன்களின் ஓட்டுக்களை கொத்தாக அள்ள, பிரபல கட்சி போட்ட மெகா பிளான்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, பல்வேறு வேடிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. தலைவர் பதவியை ஏலம் போட்டது, கறி விருந்து என அன்றாடம் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. 

இந்நிலையில், ராமநாதபுரத்தில் தன்னுடைய மனைவியை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மது பாட்டில்களை வாக்காளர்களுக்கு வினியோகிக்க முக்கிய கட்சி நிர்வாகி ஒருவர் வாங்கி வந்திருக்கும் சம்பவமானது நிகழ்ந்திருக்கின்றது. 

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தன்னுடைய மனைவி போட்டியிடுவதை முன்னிட்டு முக்கிய கட்சி நிர்வாகி ஒருவர் வாக்காளர்களை கவரும் பொருட்டு மதுபானத்தை விநியோகிக்க முடிவு செய்து தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு வரச் சொல்லி இருக்கின்றார். 

சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் மதிப்புடைய 957 மதுபாட்டில்களை அந்த உதவியாளரும் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் பின்தொடர்ந்து வந்து உதவியாளர் சென்ற ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அந்த ஆட்டோவில் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய காவல்துறை, உதவியாளர் மற்றும் ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கிய குற்றவாளியான கட்சி நிர்வாகியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous party gives liquor drinks for election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->