எங்க பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டிங்களே., திமுகவுக்கு எதிராக கிளம்பும் திமுக குரூப்.!
family politics dmk
'பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் என்றால் அது திமுக தான்' என்று தமிழகத்தில் சொல்லாதே ஆளே இல்லை. திமுகவின் பலமாக கருதப்படுவது, திமுகவின் பேச்சாளர்கள் தான்.
அப்படி மேடை பேச்சாளராக இருந்த பலரது வாழ்வில் தற்போது மண்ணை அள்ளி போட்டுள்ளது முக ஸ்டாலினின் வாரிசு அரசியல் என்று சொன்னால் மிகையாகாது. தன மகன், தான் மட்டுமே தான் திமுக என்ற பிம்பத்தை தமிழகத்தில் உருவாக்கி வருகின்றனர்.
ஆனால், இலக்கிய உலகில் இருக்கும் பலரும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து கருணாநிதி பக்கத்திலேயே வைத்திருந்தார்.
இப்போது ஸ்டாலின், உதயநிதி இரண்டு மன்னர் மன்னர்கள் மட்டுமே முன்னிலை படுத்தப்பட வேண்டும் என்பதற்காக., இவர்களை எல்லாம் கழட்டிவிட்டுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இப்படி நடந்து கொண்டதையடுத்து தங்களது வேதனைகளை யாரிடம் சொல்வது என குமுறிக்கொண்டிருந்தனர் அந்த இளகிய பேச்சாளர்கள். இல்லை இல்லை சாபம் விட்டு கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் தகுதியற்ற லியோனி, ஆண்டிமுத்து ராசா போன்றவர்களின் பேச்சால் திமுக இன்று தலைகவிழ்ந்து நிற்கிறது. இதனை பார்த்து மன்னர் மன்னர்களால் புறக்கணிக்கப்பட்ட பேச்சாளர்கள் மனமகிழ்வுடன் உள்ளனர்.
எங்கள் பொழப்பில் மண்ணை போட்ட நீங்கள் அனுபவிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது., இதெல்லாம் போதாது என்று மீண்டும் சாபம் வேறு விடுகின்றனராம்.
ஆயிரம் கோடி விளக்கம் சொன்னாலும், குடும்ப அரசியல் என்ற விமர்சனத்துக்கு கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி தலைகுனிந்து தான் ஆக வேண்டும்.