சிறுமி பலியானதன் எதிரொலி : தமிழகம் முழுவதும்., தமிழக அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு.!
fake cool drinks factory closed
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் -காயத்ரி தம்பதி. இவர்களுக்கு 13 வயது தரணி என்ற மக்கள் இருக்கிறார். இவர் நேற்று மாலை அருகில் உள்ள மணி என்பவரின் கடையில் 'டோகிட்டோ கோலா' என்ற குளிர்பானத்தை 10 ரூபாய் கொடுத்து சிறுமி தரணி வாங்கியிருக்கிறார்.
மேலும், ஒரு ரஸ்னா பாக்கெட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார். இந்த இரண்டு குளிர்பானங்களையும் குடித்த சிறுமிக்கு சிறிது நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வாந்தியும் வந்துள்ளது. உடனடியாக தாய் காயத்ரி சிறுமியை மீட்டு தாய் காயத்ரி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த சிறுமியின் உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறி இருந்ததைக் கண்டு தாய் காயத்ரி உள்ளிட்ட அனைவரும் அதிர்ந்து போயினர். இதுகுறித்து கூல்டிரிங்ஸ் வாங்கி அந்த மளிகை கடை காரரிடம் சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர் சரியான முறையில் பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாஸ்திரிநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அந்த சிறுமி அருந்திய 'டோகிட்டோ கோலா' நிறுவனத்தை தற்காலிகமாக மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், தமிழக முழுவதும் இயங்கி வரும் போலி குளிர்பான ஆலைகளை மூட நடவடிக்கை எடுப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
fake cool drinks factory closed