அதிமுக போட்ட பிச்சையால் தான் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ..!! முன்னாள் எம்.பி திருத்தணி ஹரி விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருத்தணியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.ஹரி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் ஹரி, “தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவினர் தங்களை எதிர்க்கட்சியாக நினைத்து கொண்டுள்ளனர். அதிமுக போட்ட பிச்சையால் தான் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தினமும் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜகவால் தனித்து நின்று வெற்றி பெற முடியாது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ExMP Thiruthani Hari said BJP got 4 MLAs because of AIADMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->