#BREAKING | ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டி! கூட்டணியில் இணையும் கட்சிகள் - டிடிவி தினகரன் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 

மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சற்றுமுன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும், அமமுக கூட்டணியில் சில காட்சிகள் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Eelection AMMK TTV Dhinakaran


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->