வாக்குகளை பெற ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்.! எடப்பாடி அவிழ்த்த ஆயுதம்.!
eps speech in kovai
மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி வாக்குகளை பெற்று விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார் என்று எடப்பாடி கூறியுள்ளார்.
கோவை கொடிசியா பகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது ஸ்டாலின் பகல்கனவு கொண்டிருக்கிறார் என்றும், எத்தனை விதமான அவதாரங்களை எடுத்தாலும் கூட ஸ்டாலினால் வெற்றி பெறவே முடியாது என்றும் எடப்பாடி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி, "அதிமுக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். மக்களிடம் பொய்யான தகவலை ஸ்டாலின் பரப்பி வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைக்கிறார்.
கோவையின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக 100% நிச்சயம் வெற்றிபெறும். குடும்ப அரசியல் செய்யும் கட்சி அதிமுக அல்ல. கோவையில் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் புறவழிச்சாலை என்று நிறைய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வரக் காத்திருக்கிறோம்.
திமுகவை சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதை மறைக்க ஸ்டாலின் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார். இந்தியாவில் ஒரே ஆண்டில் 2000 அம்மா மினி கிளினிக்குகளை திறந்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான்." என்று தெரிவித்துள்ளார்.