#BREAKING || இது என்ன புது டிவிஸ்ட்... பழைய வழக்கில் திடீரென மேல்முறையீடு செய்த எடப்பாடி பழனிச்சாமி.! உடனடியாக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
EPS Side appeal to chennai hc with out ops old case
அதிமுகவின் உள்கட்சித் தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர்வதற்கு ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமிக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி கே பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய ஆன காலதாமதத்தை ஏற்று, வழக்கை பட்டியலிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்று ராம்குமார் ஆதித்தன். சுரேன் பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடர்ந்தனர்.
அதில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் உருவாக்கப்பட்ட பதவியை செல்லாது என்றும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதனை எதிர்த்து, இந்த வழக்கை தாக்கல் செய்ய கட்சி உறுப்பினர் இல்லாத இவர்களுக்கு உரிமை இல்லை என்பதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி, இந்த வழக்கை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த வழக்கின் விசாரணைக்கு அனுமதிப்பதாகவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய ஆன காலதாமதத்தை ஏற்று, வழக்கை பட்டியலிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென்று ராம்குமார் ஆதித்தன். சுரேன் பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
EPS Side appeal to chennai hc with out ops old case