நீட் விவகாரத்தில் ஸ்டாலின் உண்மையை மறைக்கிறார்., இன்னும் எத்தனை உயிர் உங்களுக்கு வேணும்.! இபிஎஸ் கண்டனம்.!
eps say about ariyalur girl suicide issue
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகக்கதை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை சமத்துவம் குறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீட்தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரின் பெற்றோருக்கும், குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்,
திமுக தனது அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.
மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்.
English Summary
eps say about ariyalur girl suicide issue