அதிமுகவில் மீண்டும் யுத்தம் ஆரம்பம்.? வெடிக்கும் சர்ச்சை.! அதிர்ச்சியில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

அதிமுக கூட்டணியிலிருந்து எப்படியாவது பாஜக கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அதிமுக கூட்டணி உடன் பாஜக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அதிமுகவில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற சர்ச்சையும் பல நாட்களாக உலா வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் ராஜேந்திரபாலாஜி படத்துடன் எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்.. எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பிறகாவது திருந்தட்டும். மீண்டும் எடப்பாடி... வேண்டும் எடப்பாடி என மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதையடுத்து, இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் அரசியல் முதிர்ச்சி அதிகாரத்தின் அடக்கம், என்றென்றும் tamizhar தலைவர் ஓபிஎஸ் வழியில்  பசும்பொன் தேவர் என்றும் எடப்பாடியார் போஸ்டருக்கு பதிலடியாக ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் யுத்தம் ஆரம்பமாகி விட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps and ops poster in madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->