முதுமலையில் தொடங்கிய யானை சவாரி..!! உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்...!!
Elephant ride that started early in Mudumalai
முதுமலையில் யானை சாவரிக்கு அனுமதியளித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது பரவல் குறைந்து வருவதால் சுற்றுலா மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது அதன் படி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வருகின்ற 6 தேதி யானை சவாரி துவங்கும் என கூறிய நிலையில், யானை சவாரி மேற்கொள்ள பலரும் விருப்பம் தெரிவித்தனர். இதனால் யானை சாவரியை முன்கூட்டியே தொடங்கியது வனதுறை. இந்த அறிவிப்பால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்வுடன் யானை சவாரி செய்தனர்.
English Summary
Elephant ride that started early in Mudumalai