முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அசத்தல் பிளான்.. கலக்கத்தில் சசிகலா.! அதிர்ச்சியில் தினகரன்.!! - Seithipunal
Seithipunal


சிறையில் இருந்து சசிகலா வந்ததும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சசிகலா வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் அவர்கள் திட்டம் போட்டது போல் எதுவும் நடக்கவில்லை, சசிகலா மற்றும் தினகரனின் திட்டம் எடப்பாடியார் இடம் எடுபடவில்லை என கூறப்படுகிறது.

சசிகலா வெளியே வந்தவுடன் அமைச்சர்கள் பயந்து சசிகலா பக்கம் செல்வார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அணியாக நிற்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் தொடர்ந்து சசிகலாவுக்கும், தினகரனுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் ஓ.எஸ் மணியன் போன்ற மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களும் எடப்பாடியாருக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு நல்ல வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என பிரம்மம் உருவாக்கப்பட்ட இருந்தாலும், அதன் பிறகு பெரிய அளவில் யாரும் சசிகலாவை சென்று சந்திக்க வில்லை. 

பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எங்களுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வந்த தினகரன், இதுவரை ஒரு எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் கூட சசிகலாவை சந்திக்கவில்லை. சசிகலாவின் பிளான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் எடுபடவில்லை என்றும், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்ட பிளான் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadiyar new plan sasikala and dinakaran shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->