என்னை தவிர இதை யாரும் செஞ்சதில்லை - எதிர்கட்சிக்கு சூடு போட்ட எடப்பாடி.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டில் இதுவரை இருந்த முதலமைச்சர்கள் யாராவது தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாங்கள், எதிர்க்கட்சிகளைபோல் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

மேட்டூரில் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறிருந்ததாவது., 'தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களில் ஒருவராவது தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா?. பொதுமக்களின் ஒரு மனுவைக் கூட விட்டு விடாமல் படித்து பார்த்து தகுதி உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

முதியோர் உதவித்தொகைக்காக மனுக்கள் அதிகமாக வருகிறது; தமிழகம் முழுவதும் 5 லட்சம் தகுதி வாய்ந்த மனுவுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டத்தின் முதன்மை நோக்கம் மக்களை தேடி அதிகாரிகளை வரவைப்பது தான். மக்களின் பிரச்னைக்கு தீர்வுகாண்பதில் ஏற்படும் சிரமத்தை குறைக்கவே இந்த சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 40,000 ஏரி, குளங்கள் படிப்படியாக தூர்வாரப்படும். மேலும், கரூரில் காவிரியின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டப்படும்.எதிர்க்கட்சிகளை போல வாய்ப் பேச்சு வீரர்கள் அல்ல; நாங்கள் எதை சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம்' என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi speach about tamilnadu opponent party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->