கொலை செய்ததே உங்க ஆள் தான்., ஸ்டாலினுக்கு எடப்பாடி சரமாரி கேள்வி!!
edappadi says about nellai murder
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அணைக்கட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
எங்கே பார்த்தாலும் ஊழல், ஊழல் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ஊழலுக்காக ஒரே ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் தி.மு.க. ஆட்சிதான். திமுக தான். திமுக ஆட்சியில் இருந்த போது, ஊழல் செய்யவில்லை என்றால், வேலூரில் எப்படி கட்டுக்கட்டாக 10 கோடி பணம் வரும். எல்லா கட்சியிலும் அந்த கட்சியின் தலைவர்களின் மகன்கள் இருப்பது சாதாரணம். கட்சி தலைவர்களின் மகன்கள் கட்சிக்கு பொறுப்புக்கு வருவது தவறல்ல, ஆனால் கட்சி தலைவராக வருவதைத் தான் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். திமுக தலைவராக கருணாநிதி இருந்தார், அவருக்கு பின்னர் ஸ்டாலின், தற்போது நடிகர் உதயநிதி வந்திருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார், சட்டம் ஒழுங்கைப் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசி வரும் அவர். நெல்லை முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.
ஆனால் முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேரை கொலை செய்தவர்கள் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்பதை இந்த அரசு இரண்டே நாட்களில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு துளி கூட தகுதி இல்லை என கடுமையாக பேசினார்.
English Summary
edappadi says about nellai murder