அதிமுக கொடியை ஏற்றி., தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி கே பழனிச்சாமி உரை.!
Edappadi k Palanisami speech in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டாம் பூண்டி பகுதியில், அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றிய அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவரின் உரையில், "வேளாண்துறை சிறந்து விளங்க வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டை அனைத்தும் தூர்வாரி கொடுத்தது அம்மா அரசு. எங்கெல்லாம் தடுப்பணைகள் கட்ட வேண்டுமோ அங்கெல்லாம் தடுப்பணைகளை கட்டி மழைக்காலத்தில் நீரைத் தேக்கி, தமிழ்நாடு செழித்து இருக்க நடவடிக்கை எடுத்தது அம்மாவின் அரசாங்கம்.
பொங்கல் பரிசாக முதலில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், பின்னர் அதனை 2500 ரூபாய் கொடுத்தோம். மக்கள் சந்தோஷமாக பொங்கலை கொண்டாடினார்கள். ஆனால், தற்போது இருக்கக்கூடிய திமுக அரசாங்கம் பொங்கல் தொகுப்பில் கொள்ளையடித்தது தான் மிச்சம்.
தமிழக மக்களுக்கு சரியான முறையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் உண்ணக்கூடிய அந்த பொங்கல் தொகுப்பை தரமானதாக கொடுக்கவில்லை.
திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து இருக்கின்றார்கள். அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள்... உங்களுக்கு கிடைத்ததா? ஏமாற்று வேலை. கேட்டால் கணக்கு எடுக்கிறோம், அது எடுக்கிறோம், இது எடுக்கிறோம் என்று ஒரு வருடத்தை ஓட்டிவிட்டார்கள். நாளைக்கும் இதையேதான் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி உரையாற்றினார்.
English Summary
Edappadi k Palanisami speech in thiruvannamalai