வெற்றிடமா..? கொந்தளித்த எடப்பாடி.! ரஜினியை பார்த்து கேட்ட கேள்வி..!
edappadi asking question to rajini
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்விகள் பலவற்றை எழுதி இருக்கிறார்.
அதில், "இடைதேர்தல் வெற்றி மூலமாக தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என்பது நிரூபணமாகி இருக்கின்றது. யார் சொன்னது? ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்று..? ரஜினிகாந்த் என்ன அரசியல் தலைவரா? அவர் வெறும் நடிகர்." என அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக ரஜினிகாந்த் பல ஆண்டு காலமாக கூறி வருகின்றார். அப்பொழுது இருந்தே தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி இருக்கின்றது என அவர் பேசி வருகின்றார். இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் கூறியுள்ள வார்த்தைகள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
English Summary
edappadi asking question to rajini