குடும்பத்திற்க்காக குடும்ப அரசியலை நடத்தி வரும் கட்சி திமுக.! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ள வசவபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான மோகனை ஆதரித்து., தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

இந்த நேரத்தில் பேசிய முதல்வர்., துரோகிகள் மற்றும் எதிரிகளுக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்., திமுகவினருக்கும் - டிடிவி தினகரனும் ரகசிய உடன்பாடு வைத்து கொண்டு அதிமுக அரசிற்கு எதிரான நெருக்கடியை அளித்து வருகின்றனர். 

இவர்களின் நெருக்கடியில் இருந்து மக்கள் அனைவரும் காத்து மகத்தான ஆட்சியை நிலைக்க செய்ய வேண்டும். தொலைகாட்சி சேனல்களுக்கு மீண்டும் கட்டணத்தொகை ரூ.100 க்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 

சாதி., மதம் மற்றும் இனத்திற்கு எதிரான இயக்கமாக அதிமுகவானது இருந்து வருகிறது. திமுக குடும்ப அரசியலுக்கும் குடும்பத்திற்க்காகவும் செயல்படும். மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி., ஏழைகளுக்காக உதவி செய்கிறது. 

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அடிமட்ட சாதாரண தொண்டரும் தலைமைக்கு வரம் முடியும். வீட்டுமனை மற்றும் வீடு இல்லத்தில் ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என்று கூறினார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy speech about dmk party family political


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->