கைது செய்யப்பட்ட உதயநிதியை சந்தித்த துரைமுருகன்.! ஆவேசமாக கூறியது வார்த்தைகள்.!
duraimurugan speech about udhayanithi
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துவிட்டு வந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சிறுபான்மையினரை பழிதீர்க்கும் வகையிலும், மதத்தை படுத்துகிற வகையிலும் இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமைந்து இருக்கின்றது.
அந்த சட்டமானது இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்து அகதிகளாக வாழ்கிற தமிழர்களையும், இஸ்லாமிய சமுதாயத்தினரையும் இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கின்றது.
எனவே, இந்த சட்டம் புதிதானது என்பதால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். இந்த வெறுப்பை காட்டுவதற்காகத்தான் திமுக இளைஞரணி உதயநிதி தலைமையில் அந்த சட்ட நகலை தெருவில் கிழித்து எறிந்தனர். ஆனால், தற்போது இவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர்.
திமுகவின் இளைஞர் அணி பட்டாளம் வீறு கொண்டு எழுந்து உள்ளது. இதனை அடக்கும் சக்தி இந்த அரசுக்கு கிடையாது. மேலும் இந்த எடப்பாடி அரசுக்கும் சட்டமும் தெரியாது." என்று கடுப்பில் பேசி விட்டு சென்றுள்ளார்.
English Summary
duraimurugan speech about udhayanithi